26 August, 2011

முட்டையிலிருந்து கோழியா? கோழியிலிருந்து முட்டையா?

eggகணினியின் துணைகொண்டு ஒரு செயற்கையான வேதிவினை நிகழ்த்தப்பட்டது. இந்த வேதிவினையில் கால்சியம் கார்பனேட் துகள்களின் மீது vocledidin-17 (OC-17) புரதம் ஒட்டிக்கொண்டு படிகங்களை உருவாக்கின. காலப்போக்கில் படிகத்தின் உட்கரு தன்னைத்தானே வளர்த்துக்கொள்ளும் அளவிற்கு பெரிதானதும் vocledidin-17 (OC-17) துகள்கள் உதிர்ந்துவிட்டன. அதாவது vocledidin-17 (OC-17) ன் பங்கு ஒரு கிரியா ஊக்கி என்பதோடு சரி. இவ்வாறு உதிர்ந்த vocledidin-17 (OC-17) புரோட்டின் துகள்கள் மீண்டும் கால்சியம் கார்பனேட் படிகங்களை உருவாக்கும் பணியில் ஈடுபடுகிறது. இந்த வினையின் விளைவாக குறைந்தகாலத்தில் முட்டை ஓடு உருவாகிறது.
முட்டையில் இருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா? என்ற கேள்விக்கு பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் விடை கண்டுபிடித்திருக்கிறார்கள். கோழிதான் முதலில் வந்ததாம். இந்த கண்டுபிடிப்பு கணினியின் உதவியோடு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஷெஃப்பீல்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் முடிவின்படி முட்டையின் ஓட்டில்தான் ரகசியம் பொதிந்திருக்கிறது. முட்டை ஓடு உருவாவதில் கோழிக்குஞ்சின் புரதம் பெரும் பங்கு வகிக்கிறது. vocledidin-17 (OC-17) எனும் புரதம் முட்டை ஓட்டினை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிப்பது ஏற்கனவே அறிவுலகம் அறிந்த ஒன்று.

முட்டையிலிருந்து கோழியா? கோழியிலிருந்து முட்டையா?
எதுவாக இருந்தால் என்ன! மணமணக்கும் ருசியான கோழி வறுவல் தான் கடந்துவந்த பாதையை படங்களாக பாருங்கள்!!


 






























ஒரு கொசுரு செய்தி : மேலே கண்ட கருவுற்ற முட்டைகளை பார்த்து மிரண்டுவிடவேண்டாம்! பண்ணையில்  சேவல் இல்லாமல் வளர்க்கப்படும் கோழியிலிருந்து  கிடைக்கும் முட்டைகள் கருவுராத முட்டைகள் ! அவைகள் நான்   வெஜிட்டேரியன் என்னை சாப்பிடுங்கள் என்று முட்டைகள் கழகம் முழக்கம் இடுகிறது!
 எனவே வெஜிட்டேரியன்கள் அந்த முட்டைகள் கூறுவதை நம்பினால் ஆம்லெட்டாக செய்து அந்த முட்டைகளின் கூற்றை பரிசோதித்து பார்க்கலாம்!

No comments:

Post a Comment

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...