10 February, 2012

உடல் உறவில் இரத்தம் ஏற்பட்டால்தான் அவள் கன்னி?

ஒரு பெண் முதன் முதலில் உடல் உறவு கொள்ளும்பொழுது  இரத்தம் சிறிதளவு அவளின் பிறப்புறுப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறுவது சாதாரணமான ஒரு விசயம். இதையே ஒரு பெண்ணின் கற்பினை நிரூபிக்கும் வழியாகவும் நம் சமூகம் அநியாயத்திற்கு பயன்படுத்துகிறது.
 

நம்மிடையே இருக்கும் அறியாமையின் வெளிப்பாடுகளில் ஒன்றே இந்த ரத்தப் போக்கினை வைத்து ஒரு பெண்ணின் கற்பினை எடை போட நினைப்பது. எப்படி பத்தினி ஆனாலும் எல்லாப் பெண்களுக்கும் முதன் முறையான உடலுறவின் போது ரத்தம் வருவதில்லை.

முதலில் எவ்வாறு இந்த இரத்த வெளியேற்றம் நடைபெறுகிறது என்று பார்ப்போம்.



ஆபாசமாக கருதுபவர்கள் இதை படிக்கவேண்டாம். அறிவியல் கண்ணோட்டம் உள்ளவர்கள் மட்டும் தொடருங்கள்! பிளீஷ்...
பெண் உறுப்பை எடுத்துக் கொண்டோமானால் தனித்தனியாக இரு துவாரங்கள் இருக்கும். ஒன்று சிறு நீர் துவாரம்( urethral opening). மற்றது மாதவிடாய் வெளியேற்றம் நடைபெறும் மற்றும் உடலுறவில் ஈடுபடும் துவாரம்vaginal opening).
இரண்டாவதாக உள்ள மாதவிடாய் வெளியேறும் அல்லது உடலுறவில் ஈடுபடும் துவாரம் கைமண் (hymen)எனப்படும் ஒரு மென்சவ்வினால் சூழப் பட்டிருக்கும். அந்த மென்சவ்வின் நடுவிலே ஒரு சிறிய துளை இருக்கும் அந்த துளையின் ஊடாகவே அந்த பெண்ணுக்கு மாதவிடாய் வெளியேற்றம் நடைபெறும்.





முதன் முதலில் உடலுறவில் ஈடு படும் போது இந்த மென்சவ்வு கிழிவடைவதனால் ரத்தப் போக்கு ஏற்படும். ஆனாலும் இது எல்லாப் பெண்களிலும் சாத்தியமில்லை.

சில பெண்களுக்கு இந்த ஹைமண் இயற்கையாகவே இல்லாமல் இருக்கலாம்

சில பெண்களுக்கு இந்த ஹைமண் உடலுறவு அல்லாத வேறு காரணங்களால் உடைந்து போகலாம்.அதாவது சைக்கிள் ஓட்டம், பாரத நாட்டியம் , ஸ்கிப்பிங் ,போன்ற செயற்பாடுகளின் போது கூட இந்த ஹைமண் பாதிக்கப் படலாம்.

சுய இன்ப செயற்பாட்டில் ஈடு படும் பெண்களிலும் இந்த ஹைமண் உடைந்து விடலாம். ஆமாம்! பெண்களும் இப்படிப்பட்ட சிந்துவிளையாட்டுகளை நடத்துவது உண்டு!

சில பெண்களிலே இந்த ஹைண் இளாஸ்டிக் (elastic) தன்மையானதாக இருக்கும் இவர்கள் எத்தனை முறை உடலுறவில் ஈடுபட்டாலும் அவர்களின் கைமண் அப்படியே பாதிக்கப் படாமல் இருக்கலாம்.

ஆகவே ஹைமண் மென்சவ்வு உள்ளதை வைத்தோ அல்லது ரத்தப் போக்கினை வைத்தோ மட்டும் வைத்து ஒரு பெண்ணின் கன்னித்தன்மையை நிரூபித்து விட முடியாது.

எனவே முதல் இரவில் வேண்டாத எண்ணங்களையும், பரிசோதனைகளையும் செய்துகொண்டு அந்த இனிமையான நேரத்தை கசப்பாக்கிகொள்ளாதீர்கள்!! என்பதை மட்டும் வேண்டுகோளாக வைப்பது கடமை!


6 comments:

  1. Vanakkam paa! Naangooda nenachen, ebdidaa indha inayppu saathiyam aagumnu! Adhaavadhu, ebdi rendume ore edathula (Sangattamaa irukkaadhu!)???

    super oatta paa! chee, super koatta paa!

    Attagaasamaana thagaval! Neraya per(aangal) therinjukka vendiya thagaval!

    ReplyDelete
  2. ada neenga vera boss! ippo indha vishayam olagathila neraya naatula, samoogathila irukku. eppa aan pennai oru saga manushiyaa paakranno ange indha maadhiri ketta paya pththi ellam vela seyaadhu

    ReplyDelete
  3. nalla thagaval nandri..

    ReplyDelete

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...