27 March, 2013

இந்திய நறுமண பொருள்கள் மூலம் புதிய சிகிச்சை முறைகள்

இந்திய நறுமண பொருள்கள் மருத்துவ ரீதியாக எவ்வாறு பயன்படுகிறது என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. நறுமண பொருள்களில் மஞ்சள் பற்றிய ஆய்வில், குர்குமின் என்ற பொருள் அதற்கு மஞ்சள் நிறத்தை கொடுக்கிறது என்றும் மேலும் டிரைகிளிசரைடு என்ற வேதி பொருளின் தாக்கத்தை வெகுவாக குறைக்கிறது என்பதும் தெரிய வந்துள்ளது. உடம்பில் எலும்பு மற்றும் தசைப்பகுதிகளை இணைக்கும் டென்டன் என்னும் திசு வளர்ப்பில் குர்குமின் செயல்பாடு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் இணைப்புகளில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வலி ஆகியவை வெகுவாக குறைகின்றது. இதனால் ஆர்த்ரிடிஸ், முடக்குவாதம் மேலும் புற்றுநோய் ஆகியவற்றிற்கும் புதிய சிகிச்சை முறைகள் தோன்ற வழிவகுக்கும் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
பென் மாநிலத்தில் நடைபெற்ற மற்றொரு ஆய்வில், நறுமண பொருள்களான ரோஸ்மேரி, ஆரிகேனோ, இலவங்கம், மஞ்சள், கருமிளகு, கிராம்பு, வெள்ளை பூண்டு பொடி மற்றும் பப்ரிகா ஆகியவை கலந்த உணவு ஒரு பிரிவினருக்கு பரிமாறப்பட்டது. மேலும் மற்றொரு பிரிவினருக்கு நறுமண பொருள்கள் இல்லாத உணவு தரப்பட்டது. இதில், நறுமண பொருள்கள் இரத்தத்தில் மேற்கொள்ளும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், டிரைகிளிசரைடு செயல்பாடு 30 சதவீதம் குறைந்ததும், 13 சதவீதம் ஆன்ட்டியாக்சிடன்ட் செயல்பாடு அதிகரித்ததும் மேலும் தேவையற்ற நிலையில் இன்சுலின் பயன்பாடு 20 சதவீதம் குறைக்கப்பட்டதும் தெரிய வந்தது. இவ்விரு ஆய்வுகளும் இந்திய நறுமண பொருள்கள், மருத்துவ குணங்கள் நிறைந்தவை என்பதற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...