27 September, 2025

காக்கைகளின் அந்தரங்க இல்வாழ்க்கை!


காக்கைகள் பற்றிய ஏராள ரிலிஜியஸ் நம்பிக்கைகள் இந்தியாவில் உண்டு.சனிபகவானின் வாகனமாகத் துதிக்கப்படும் இப் பறவைக்குத்தான் பித்ருக்களுகான பிண்டம் வைக்கிறார்கள். எனவே இந்துக்கள் எவரும் இப்பறவையைக் கொல்வதில்லை. பயமும் கூட எங்கே சனி பகவான் சப்போர்ட்டுக்கு வந்துவிடுவாரோ என்று! (சரிதானே நல்லநேரம் சதிஷ்குமார்) ஆனால் அமெரிக்காவிலும்,கனடாவிலும் ‘ க்ரோ ஹன்டிங் என்பது ஒரு பாப்புலர் ஸ்போர்ட். காக்கைகளுக்குக் பிடிக்காத டம்மி ஆந்தையை செட் பண்ணி, அவைகள் ஈர்த்து ஜாலியாக சுட்டுத் தள்ளுகிறார்கள்.

கோவிட் புகழ் வெளவால்களை பற்றிய ஒரு ருசிகர ஆராய்ச்சி

வெளவால்கள் எவ்வாறு திசைகளை கண்டுபிடித்து பறக்கின்றன என்பதை கண்டறிய ஒரு ஜி.பி.எஸ். கருவியை ஜெருஸலம் பல்கலை கழக விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். தங்களது இலக்குகளை திறம்பட நிர்ணயம் செய்வதில் வீட்டுப்  புறாக்களை விட பழ வெளவால்கள் திறமையானவை என இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம்: ஒரு ஆய்வின் தகவல்


படுத்ததும் தூங்கிப்போகிறவர்களுக்கு அது ஒரு வரம். ஆனால், எல்லோருக்கும் இது சாத்தியமில்லை. சிலருக்கு படுத்ததற்கு நீண்ட நேரத்திற்குப்பின்னரே தூக்கம் வரும். அப்படியும் தூக்கம் வராதவர்கள் கெளண்டிங் ஷீப் செய்வதுண்டு. அதாவது, எளிதில் தூக்கம் வராதவர்கள் ஒன்றிலிருந்து 100.... 200..... 300 வரை எண்ணத்துவங்குவார்கள். அப்படி எண்ணிக்கொண்டிருக்கும் போதே தூக்கம் வந்து விடும் என்பது ஒரு நம்பிக்கை. இப்படி எண்ணுவதற்கு கெளண்டிங் ஷீப் என்று பெயர். இங்கிலாந்துகாரர்களுக்கு தூக்கம் பிடிப்பதற்கு குறைந்தது 37 நிமிடங்கள் ஆகிறது என்கிறது, இது குறித்த ஒரு ஆய்வு. அதற்காக அவர்கள் மெல்லிசையை விரும்பி கேட்கிறார்களாம். இந்த மெல்லிசையை கேட்டுக்கொண்டிருக்கும் போதே தூங்கிப்போவார்களாம். சுவாரசியமாக, இயற்கையான சப்தங்களை கேட்டுக்கொண்டே தூங்க முயற்சிப்பவர்களும் இருக்கிறார்கள். உதாரணமாக கிரீச்சிடும் பறவைகளின் ஒலிகள். மெல்லிய காற்றின் இரைச்சல், நீரோடையின் சலசலப்பு போன்றவை தூக்கத்தை எளிதில் வரவழக்க பயன்படுபவையாக இருக்கின்றன என்கிறது இந்த ஆய்வு. இவற்றுக்கெல்லாம் மேலாக, இருக்கவே இருக்கிறது பழமையான ஒரு முறை. அது தான் புத்தகம் படிப்பது. இதுவும் தூக்கத்தை வரவழைக்கிற விஷயங்களில் முக்கியமானது தான். துணையுடன் பேசிக்கொண்டே தூங்கிபோகிறவர்களும் இருக்கிறார்கள். விசித்திரமாக, கடிகாரத்தின் டிக் டிக் ஒசை, சாலையில் செல்லும் வாகனங்களின் சப்தம், வேக்குவம் க்ளீனர் மற்றும் ஹேர் ட்ரையரின் சப்தமும் தூக்கத்தை வரவழைக்கும் விஷயங்களின் பட்டியலில் இடம் பெறுகின்றன. இவையத்தனைக்கும் வில்லனாக இருப்பது பக்கத்தில் தூங்குபவரின் குறட்டை சத்தம் என்று ஆத்திரப்படுகிறார்கள் உண்மையில் பாதிப்புக்குள்ளானவர்கள்.

சாப்பிட்ட உடன் `செக்ஸ்’ வைத்துக் கொள்ளலாமா?

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று சொல்வார்கள். அதாவது, உணவு உட்கொண்ட உடனேயே சுகமாய் தூக்கம் வரும். அதனால்தான் அப்படிச் சொன்னார்கள். மருத்துவ ரீதியாகப் பார்த்தால், சாப்பிட்ட உடனே, அந்த உணவு செரிப்பதற்கு தேவையான சக்தியைக் கொடுக்க வயிற்றுப்பகுதிக்கு அதிக அளவில் ரத்தம் பாயும். இதனால், மூளை உள்ளிட்ட மற்ற உடல் பாகங்களுக்கு சென்ற ரத்தத்தின் அளவு குறையும். அதனாலேயே ஒருவித மயக்கம் ஏற்படுகிறது. இதுதான் உண்மை!

மலைப் பாம்பின் இறைச்சி இனிப்பாக இருக்குமாமே?


ஆணைத் தேடிச் செல்லும் பெண் மலைப்பாம்பு 

மூவாயிரத்துக்கும் மேல் உள்ள பாம்பு வகைகளில் மலைப் பாம்புதான் அரதப் பழசுரகம்! 13 கோடியே 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது! முதன் முதலில் தோன்றிய மூதாதையர்!!  விஷம் இல்லாத பாம்புகள்!
ஸ்குவாமேட்டா ( Squamata) ஆர்டரைச் சார்ந்த பைத்தோனிடே(Pythonidae) குடும்பத்தை சார்ந்த இந்திய வகை பாம்பு 19 அடி நீளத்துக்கு இருக்குமாம். ஆஸ்திரேலியாவில் 20 அடியும் தென் அமெரிக்காவின் அனகோன்டா 25 அடிக்கும் மிகாமலும் இருக்கின்றன! ஆனால் ரெட்டிகுலேட்டட் பைத்தான் (Reticulated Pythons,) என்னும் மலைப் பாம்புதான் வாழும் பாம்புகளில் பெரியது இது 35 அடி நீளம் கூட ஒய்யாரமாக வளர்ந்துத் தள்ளும்! எடை 350 பவுண்டைத் தாண்டும் வயிற்றுப் பகுதியின் குறுக்கு வெட்டுத் தோற்றம் மட்டும் 3.5 அடிஇருக்கும்!

பைத்தான் மொலூராஸ் (Python molurus) எனப்படும் நம்ம ரெகுலர் மலைப்பாம்பு வெள்ளையும் மஞ்சளும் கலந்த மண் நிறத்தில் இருக்கும் உடலின் மேற்புறத்தில் சதுரத் திட்டுக்கள் தலை முதல் வால் வரை வரிசையாக அமைந்திருக்கும். இதிலும் இரண்டு பிரிவு. 1. கருப்பு தலை மலை பாம்பு 2.இந்திய பாறை மலைப் பாம்பு





பர்மீஸ் (Burmese Python (Python molurus bivittatus) ) மலை பாம்பு ரகங்கள் செல்ல பிராணிகளாக வளர்க்கப்படுகிறதாம்! அதில் கேரமல்பர்மீஸ் ரகம் பார்க்க கொள்ளை அழகு!
 ‘மோல்டிங்எனப்படும் தோலுரித்தல் ஆண்டுக்கு ஐந்தாறு தடவை நடக்கிறது. உடலைப் போர்த்தியிருக்கும் பாலிதீன் உறை போன்ற தோலை இளம் பெண் தன் டைட்டான ஜீன்ஸ் பேண்ட்யை கழட்டுவது போல இவை கழட்டித் தள்ளுகின்றன. முதலில் மூக்குப் பகுதியில் தோன்றும் உறை நெகிழ்வை ஏதேனுவோரு கல்லிடுக்கில் அல்லது முள்ளில் சிக்க வைத்து பொலபொலவெனத் தோலுரித்து விட்டு நிர்வாணமாய்? ப்யூட்டி பார்லரில் இருந்து மேக்கப் முடித்து வெளியே வரும் பிகர் கணக்காய் வெளிப்படும் அப்புறம் சுமார் இரண்டரை மாதங்களுக்கு இந்தப் பளிச் அலங்காரம்தான்! தோலுரித்த மலைப் பாம்பு தன் மேல்டேட்டூசெய்த டிசைன் ஆக நல்ல வெளிச்சத்தில் பார்த்தால் பல நிறங்களோடு அதன் மேனி 

மலைப்பாம்பின் தோல்! அருகாமையில்!!
 அடர்ந்த காடு பகுதிகளும் ஆற்றோரப் படுகைகளும் இவைகளுக்கு பிடித்தமான வாழும் பகுதி. இவற்றில் காட்டுவாசி மலைப் பாம்புகள் ஜாலியாக மரங்களில் உயரமாக ஏறி கிளையோடு கிளையாக தொங்கி கொண்டே தூங்குவது வாடிக்கை! ஆற்றோரவாசிகள் கரையோரத்தில் மூக்கை மட்டும் வெளியே விட்டு நீருக்குள் அமிழ்ந்து கிடப்பது பழக்கம்.



தேவைப்பட்டால் தண்ணீரில் அட்டகாசமாய் நீச்சலடிக்கும். மேலும் தண்ணீருக்குள் மூச்சைப்பிடித்து அரைமணி நேரம் கூட தம் புடிக்குமாம்!!
மலைப் பாம்புகள் மகா சோம்பேறிகள் ஆபத்து காலத்தில் கூட அப்படியொன்றும் வேகமாகத் தப்பிக்கமுடியாது. இரையை கண்டால் மட்டும் கொஞ்சம் வேகமாக இயக்கம் இருக்கும்

மேக்ஸிமம் அளவிற்கும் விரிக்ககூடிய தன்மையை கொண்ட தாடை எலும்புகள் இணைக்கப்படாத  வாயை பிளந்து கொண்டு தன்னுடைய பிளவு நாக்கின் (Vomeronasal organ) உணர் சக்தி, மற்றும் மோப்ப சக்தி மூலம் இரையை நோக்கி வேகமாக முன்னேறும் போது விலா எலும்புகளின் அலைஅலையான 
இயக்கத்தை பயன்படுத்தி ஒரே நேர்கோட்டில் செல்லும். அப்பொழுது துளி கூட
உடலை நெளிக்காது. இரையை நெருங்கியவுடன் தன் வால் பகுதியை வீசி 
இரையின் உடலை ஒன்றிரண்டு சுற்றுகள் சுற்றி இறுக்கிப் பிடித்துக் கொள்ளும். பிடியை மென்மேலும் இறுக்குவதால் இரை சுவாசத்துக்கு ஏங்கி உயரிழக்கும்இறந்த இரையின்  உடல் முழுவதையும் ஒரு முறை நாக்கால் முகர்ந்து பார்த்து விட்டு (ஆம் பாம்புக்கு நாக்குதான் மூக்கு) படிபடிப்படியாக விழுங்கத் தொடங்கும். முன் ஜாக்கிரதையாக தலையைத்தான் முதலில் விழுங்கும். அதன் பின்  அளவற்றுச் சுரக்கும் உமிழிநீரின் உதவியோடு கொஞ்ச கொஞ்சமாக ஸ்லோமோஷனில் டைட்டானிக் கப்பல் போல இரை உள்ளே போய்க் கொண்டிருக்கும். உள்ளே விழுங்கப்படும் இரை தப்பி  வெளியே வராமல் இருக்க மலைபாம்பின் பல் அமைப்பு உள்ளே வளைந்து சிறப்பு ஒன்வே லாக்காக இருக்கும். இப்படியொரு  நல்ல விருந்தை முடித்துக் கொண்ட மலைப்பாம்பு இடத்தை விட்டு நகர முடியாமல் அசைவற்றுக்கிடக்கும் வலுக்கட்டாயமாக நகர வைத்தால் விழுங்கிய இரையின் கொம்புகள், நகங்கள், பற்கள் போன்ற கூரிய பகுதிகள் பாம்பின் உடலைக் கிழித்துவிடக்கூடும். அதனால் தான் இரைக்குபின் அசைவற்று படுத்து கிடக்கும். மனிதர்களின் தோள்பட்டை விரிந்துள்ளதால் மலைப்பாம்புக்கு மனிதன் வேண்டாத இரை! இருப்பினும் குழந்தைகள் கிடைத்தால் இரையாக்கிவிடும். ஒரு பெண்ணை மலைபாம்பு தாக்கி விழுங்க முயற்சி செய்துள்ளது. ஏன் விஷம் உள்ள நாகபாம்புடன் கூட மலைபாம்பு மோதியுள்ளது.
மற்ற விலங்குகளை போல மலைப்பாம்புகள் தினசரி சாப்பிட்டு ஏப்பம் விட்டு அதை அன்றே ஜீரணித்து மறுபடியும் விருந்துக்கு தயாராவதில்லை. உட் கொண்ட இரையின் பருமனையும் சீசனையும் பொறுத்தே ஜீரணம் ஆகும். கோடைக்காலத்தில்  எலி, கோழி, வாத்து போன்றவை ஒரு வாரத்திலும், முயல், பெருச்சாளி, முள்ளம்பன்றி போன்றவை இரண்டு வாரத்திலும் ஆடு, மான், நரி போன்றவை மூன்று வாரத்திலும் என ஜீரணமாக மலைபாம்புகள் சார்ட் வைத்துள்ளது. அதுவரை இவைகள்
நான்டயட்என்று அருகில் வரும் இரைகளிடம் கூறிவிடும். இரை எதுவும் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் கூட ஒரு மலைப்பாம்பு உயிருடன் இருக்கும்அந்த சமயங்களில் தன்னுடைய வயிறு, இதயம், அகியவற்றின் அளவு  மற்றும் ஜீரண அமிலத்தை சுருக்கி கொள்ளும் சிறப்பு வசதியை கொண்டிருக்கிறது. இரை உள்ளே நுழைந்தவுடன் மேஜிக் போல் எல்லாமே அதிகம் ஆகிவிடும்
ஒரு ஆட்டை முழுமையாக  விழுங்கும் மலைப் பாம்பு


5 முதல் 6 வயது முடிந்து விட்ட மலைப் பாம்புகளில்  இனச்சேர்க்கை டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மாதங்களில் மட்டுமே. இந்தச் சீசனில் ஈஸ்ட்ரோஜன்ஆதிக்கத்தில் இருக்கும். (இதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே இனச்சேர்க்கைக்கான முன் ஏற்பாடாக புதரில் அல்லது மரபொந்துகளில் புரூமேஷன் (Brumation ) தயாரிப்பு பணியை செய்யும்.) இந்த தருணத்தில்  பெண் மலைப் பாம்புக்கு துணை தேவைப்படும். இதற்காக கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் ஆண் மலைப் பாம்பின் இருப்பிடம் தேடிச் செல்லும் ஆனால் அருகில்  வந்தவுடன் பெண்மைக்கே உரிய இலக்கணத்துடன் மிக அருகில் செல்லாமல் தூரத்திலிருந்தே சமிக்கை தரும்.. அந்த நேரம் ஆணுக்குத் தோதாக இருந்தால் மட்டுமே  காதல் விளையாட்டு! இல்லையென்றால் உதட்டைப் பிதுக்கி நோ சொல்லிவிடும். கனமான இரை வயிற்றுக்குள் இல்லாதவரையில் ஆண் மலைப் பாம்புகள் தன் சோம்பேறித்தனத்தை தூர வைத்துவிட்டு போனால் போகிறது என்பது போல் இணைக்கு இணங்கிவிடும்!

காதல் விளையாட்டின் போது ஒன்றோடொன்று  சுற்றி பின்னிப் பிணைந்து கொள்ளும். உடலை இறுக்கி அந்த இறுக்கத்தையும் ரசித்தபடி உடலின் ஒவ்வொரு மில்லி மீட்டரும் ஸ்பரிசிக்கும் வகையில் நீண்ட நேரம் ஆலாபணை நடத்தும். மலைப்பாம்பின் வால் பகுதியில்தான் மேற்படி சமாச்சாரங்கள் உள்ளன. ஆண் மலைபாம்புக்கு வலது புறம் ஒன்று இடது புறம் ஒன்று என இரண்டு ஆண் குறிகள் உள்ளது. (Hemipenes)  சூழ்நிலைக்கு ஏற்ப ஏதேனும் ஒரு விஷயத்தை இனவிருத்திக்கு பயன்படுத்தும். அந்த  வால்சண்டையில் வால்கள் சரியாக இணையும் பொழுது வெற்றிகரமான சேர்க்கை நடந்து முடியும்..பிறகு இரண்டும் மங்களம் பாடி இனிதே பிரிந்துவிடும்.

வாலோடு வால்முக்கிய நிகழ்வு


சினைமுட்டைகளை வயிற்றில் உள்ளடக்கிய மலைப் பாம்பு

மூன்று மாதங்களில் பெண் மலைப்பாம்பு 12 முதல் 36 முட்டைகள் இடும். உடலை ஸ்பிரிங் போல் சுற்றி முட்டைகள் 58 நாட்கள் தன்னுடைய உடலில் அதிக அளவில் உஷ்ணத்தை உருவாக்கி  அடை காக்கும்.


பிறக்கும் குஞ்சுகள் 2.5 அடி நீளத்திலிருக்கும். முதல் தோலை உரிக்கும் வரை முட்டைக்குள்ளேயே இருந்துவிட்டுதான் பின் வெளியில் வரும். வெளியே ந்தவுடன்  தன் முதல் வேட்டையை ஆரம்பிக்கும். அத்துடன்  பெண் மலைப்பாம்பின் தாயின் பராமரிப்பும் முடிந்துவிடும்.
பிறந்த குட்டி மலைப்பாம்புகள் காட்டுப் பூனை முதல் நரி வரை பல எதிரிகளிடம் தப்பினால் 4 ஆண்டுகளில் நன்றாக வளர்ந்த  மலைப் பாம்பு ஆகிவிடும். வளர்நத பாம்புகளுக்கும் சிங்கம், புலி, மனிதன் என பல எதிரிகள் இருப்பதால் இதனுடைய எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. மலைப் பாம்பு தன் எதிரிகளிடமிருந்து தப்பிவிட்டால் தனது ஆயுள் காலம் 20 ஆண்டுகள் வரை வாழ்ந்துவிடும்!
மனிதர்களின் மலைப்பாம்பு பயன்பாடு மலைக்க வைக்கிறது. மலைபாம்பின் இரத்தம் தாய்லாந்தில் மார்க்கட்டில் ஏக கிராக்கி! வீரியத்தை அதிகப்படுத்துகிறதாம்!!
இந்தியாவில் மலைப்பாம்பின் கொழுப்பு முக்கியமாக கேரளா பகுதியில் மருந்து பொருளாக பயன்படுகிறது. எதற்கு என்று சொன்னால் ஆஸ்துமா நோயாளிகள் கேரளா ஆயுர்வேதிக் மருந்துகளை சாப்பிட தயங்குவார்கள்.
மேலை நாடுகளில் மலைப்பாம்பின் தோலில் செய்த அலங்கார  பொருள்கள், பர்ஸ், கை பை விற்பனை சக்கைப்போடுபோடுகிறது.
சீனாவின் சிலப் பகுதிகளில்  மலைபாம்பின் இறைச்சி உணவாகிறது! அவர்களின் கூற்றுப்படி மலைப் பாம்பின் இறைச்சி சர்க்கரை போல் இனிக்கிறதாம்! யாரேனும் முயற்சித்து உண்மையா என  கூறுங்களேன்!!



கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!!


பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான்.
குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே சுகமாகவும், பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால் வலிமையாகவும், சுதந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல. எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி விடுகின்றது.
முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படுக்கையினைக் கலைத்து சிறு குச்சிகளின் கூர்மையான பகுதிகள் வெளிப்படும்படி செய்து கூட்டை சொகுசாகத் தங்க வசதியற்றபடி செய்து விடுகின்றது. பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத் தூண்டுகின்றது. தாய்ப் பறவையின் இம்சை தாங்க முடியாத கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்புவரை வந்து நிற்கின்றது. அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின் வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும் உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்து மலைத்து நிற்கின்றது.
அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப் பயணிக்க தைரியமற்று பலவீனமாக நிற்கின்றது. அது ஒவ்வொரு குஞ்சும் தன் வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம். அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையே தீர்மானிக்க விட்டால் அது கூட்டிலேயே பாதுகாப்பாகத் தங்கி விட முடிவெடுக்கலாம். ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும் பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடிய இடமல்ல. சுயமாகப் பறப்பதும் இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப் பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவை அறியும்.
அந்தக் கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பில் என்ன செய்வதென்று அறியாமல் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும் அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக் குஞ்சின் உணர்வுகளை லட்சியம் செய்யாமல் குஞ்சை கூட்டிலிருந்து வெளியே தள்ளி விடுகிறது. அந்த எதிர்பாராத தருணத்தில் கழுகுக்குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப் பறக்க முயற்சி செய்கின்றது. முதல் முறையிலேயே கற்று விடும் கலையல்ல அது.
குஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்க முடியாமல் கீழே விழ ஆரம்பிக்கும் நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன் குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது. குஞ்சு மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக இருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது. அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். தன் குஞ்சைப் பிடித்துக் கொண்டு வானுயரப் பறக்கும் தாய்க்கழுகு மீண்டும் அந்தக் கழுகுக்குஞ்சை அந்தரத்தில் விட்டு விடுகிறது. மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப் பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக் குஞ்சு உள்ளாகிறது.
இப்படியே குஞ்சை வெளியே தள்ளி விடுவதும், காப்பாற்றுவதுமாகப் பல முறை நடக்கும் இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின் சிறகுகள் பலம் பெறுகின்றன. காற்று வெளியில் பறக்கும் கலையையும் விரைவில் கழுகுக்குஞ்சு கற்றுக் கொள்கிறது. அது சுதந்திரமாக, ஆனந்தமாக, தைரியமாக வானோக்கிப் பறக்க ஆரம்பிக்கிறது.
கழுகுக் குஞ்சு முதல் முறையாக கூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கி நிற்கும் அந்தத் தருணத்தில் தாய்க்கழுகு அதனை முன்னோக்கித் தள்ளியிரா விட்டால் அந்த சுதந்திரத்தையும், ஆனந்தத்தையும், தைரியத்தையும் அந்தக் கழுகுக்குஞ்சு தன் வாழ்நாளில் என்றென்றைக்கும் கண்டிருக்க முடியாது. பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினை விட்டு வெளியே தாய்ப்பறவை தள்ளிய போது அது ஒருவிதக் கொடூரச் செயலாகத் தோன்றினாலும் பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும் யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப் பேருதவி என்பதை மறுக்க முடியாது
ஒவ்வொரு புதிய சூழ்நிலையும் யாருக்கும் ஒருவித பதட்டத்தையும், பயத்தையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால் அந்தக் காரணத்திற்காகவே அந்த சூழ்நிலைகளையும், அனுபவத்தையும் மறுப்பது வாழ்வின் பொருளையே மறுப்பது போலத் தான். கப்பல் துறைமுகத்தில் இருப்பது தான் அதற்கு முழுப்பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் கப்பலை உருவாக்குவது அதை துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அல்ல. கப்பலின் உபயோகமும் அப்படி நிறுத்தி வைப்பதில் இல்லை. கழுகிற்கும், கப்பலுக்கும் மட்டுமல்ல, மனிதனுக்கும் இந்த உண்மை பொருந்தும்
தாய்க்கழுகு தான் குஞ்சாக இருக்கையில் முதல் முதலில் தள்ளப்பட்டதை எண்ணிப்பார்த்து "நான் பட்ட அந்தக் கஷ்டம் என் குஞ்சு படக்கூடாது. என் குஞ்சிற்கு அந்தப் பயங்கர அனுபவம் வராமல் பார்த்துக் கொள்வேன்" என்று நினைக்குமானால் அதன் குஞ்சு பலவீனமான குஞ்சாகவே கூட்டிலேயே இருந்து இறக்க நேரிடும். ஆனால் அந்த முட்டாள்தனத்தை தாய்க்கழுகு செய்ததாக சரித்திரம் இல்லை
அந்த தாய்க்கழுகின் அறிவுமுதிர்ச்சி பல பெற்றோர்களிடம் இருப்பதில்லை. "நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" என்று சொல்லக்கூடிய பெற்றோர்களை இன்று நாம் நிறையவே பார்க்கிறோம். ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமும் அதில் கும்பலாகக் குழந்தைகளும் இருந்த போது பெற்றோர்களுக்குத் தங்கள் ஒவ்வொரு குழந்தை மீதும் தனிக்கவனம் வைக்க நேரம் இருந்ததில்லை. அதற்கான அவசியம் இருப்பதாகவும் அவர்கள் நினைத்ததில்லை.
ஆனால் இந்தக் காலத்தில் ஓரிரு குழந்தைகள் மட்டுமே உள்ள நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். அதில் தவறில்லை. ஆனால் தான் பட்ட கஷ்டங்கள் எதையும் தங்கள் குழந்தைகள் படக்கூடாது என்று நினைக்கும் போது பாசமிகுதியால் அவர்கள் அந்தக் கஷ்டங்கள் தந்த பாடங்களின் பயனைத் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கத் தவறி விடுகிறார்கள். அதற்காக "நான் அந்தக் காலம் பள்ளிக்கூடம் செல்ல பல மைல்கள் நடந்தேன். அதனால் நீயும் நட" என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. வசதிகளும், வாய்ப்புகளும் பெருகி உள்ள இந்தக் காலத்தில் அப்படிச் சொல்வது அபத்தமாகத் தான் இருக்கும்.
இன்றைய நவீன வசதி வாய்ப்புகளின் பலனை பிள்ளைகளுக்கு அளிப்பது அவசியமே. தேவையே இல்லாத கஷ்டங்களை பிள்ளைகள் படத் தேவையில்லைதான். ஆனால் 'எந்தக் கஷ்டமும், எந்தக் கசப்பான அனுபவமும் என் பிள்ளை படக்கூடாது' என்று நினைப்பது அந்தப் பிள்ளையின் உண்மையான வளர்ச்சியைக் குலைக்கும் செயலே ஆகும்.
வாழ்க்கையில் சில கஷ்டங்களும், சில கசப்பான அனுபவங்களும் மனிதனுக்கு அவசியமானவையே. அவற்றில் வாழ்ந்து தேர்ச்சி அடையும் போது தான் அவன் வலிமை அடைகிறான். அவற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாகப் பெற்றோர் நினைப்பது அவனுக்கு வாழ்க்கையையே மறுப்பது போலத் தான். சில கஷ்டங்கள் பிள்ளைகள் படும் போது பெற்றோர்களுக்கு மனம் வருத்தமாக இருக்கலாம். ஆனால் கஷ்டங்களே இல்லாமல் இருப்பது வாழ்க்கை அல்ல, வாழ்க்கையின் அர்த்தமும் அல்ல, அது சாத்தியமும் அல்ல.

08 November, 2020

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை


கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன்

4சுழி 5சுழி போட்டானாம்! 

என்னப்பா னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்-

“தமிழ் வளரவே கூடாதாய்யா?

ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம் 

4சுழி 5சுழி இருக்கக் கூடாதா?


இது எப்படி இருக்கு? 


தமிழ் எழுத்துகளில் -

ரெண்டுசுழி ன என்பதும் தவறு! 

மூனுசுழி ண என்பதும் தவறு!


ண இதன் பெயர் டண்ணகரம்,

ன இதன் பெயர் றன்னகரம் என்பதே சரி.


மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழி ணகர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ட வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு டண்ணகரம் னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்?)


தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி னகரஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ற வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு றன்னகரம் னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க?)


இது ரெண்டும் என்றுமே மாறி வராது.. 

(இதுல கூட பாருங்களேன்? பிரியாத காதலர்கள் மாதிரிச் சேந்து சேந்தே வர்ரதப் பாருங்களேன்! இது புரியாம இதுகள  நாம பிரிச்சுடக் கூடாதுல்ல?)


வேற மாதிரி சொன்னா 

இதுவும் வர்க்க ஒற்றுமைதான்! 

(வர்க்க எழுத்து-ன்னா, 

சேந்து வர்ர எழுத்து! அவ்ளோதான்)


இந்தப் பெயரோடு (டண்ணகரம், றன்னகரம்) 

இந்த ண, ன எழுத்துகளை அறிந்து கொண்டால் 

எழுத்துப் பிழையும் குறையும். 


எப்புடீ?


மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல ட இருக்கா,

அப்ப இங்க மூனு சுழி ண தான் வரும்.

ஏன்னா அது டண்ணகரம்.


கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல ற இருக்கா

அப்ப இங்க ரெண்டு சுழி ன தான் வரும்.

ஏன்னா அது றன்னகரம். 


இதே மாதிரித்தான் ந கரம் என்பதை, தந்நகரம்னு சொல்லணும்

ஏன்னா இந்த ந் எழுத்தை அடுத்து 

வரக்கூடிய உயிர்மெய் த மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை)


இது மாதிரி தெரிஞ்சிக்கணும் னு 

நெனைக்கிறவங்க மட்டும்

தொடர்ந்து படிக்கலாம். 

(தெரிஞ்சவுங்க பின்னூட்டத்த இட்டுட்டு 

அடுத்த பதிப் பார்க்கப் போகலாம்)


நல்ல உச்சரிப்புக்கு..

செய்தியாளர் ஷோபனா ரவி

தமிழில் எந்த எழுத்தின்  பின் எந்த எழுத்து வரும் என்பதை அடிப்படையாக வைத்தே (க ங ச ஞ ட ண  எனும் வரிசையில்) மெய்யெழுத்துகள் பதினெட்டும் வரிசைப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன. 


தமிழின் மெய்யெழுத்து வரிசை அமைப்புக்கும் அர்த்தமுண்டு.

இதைப் புரிந்துகொண்டால், எழுத்துப் பிழை பெரும்பாலும் வராது. உச்சரிப்பும் தெளிவாகும். (என்ன..? இதெல்லாம் பாடத்தில் வராது!)

இது பற்றித்தான் இந்தப் பதிவு. சரியா?


உதாரணமாக-

க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன – எனும் பதினெட்டு மெய்யெழுத்துகளும் சும்மா அடுத்தடுத்து வைக்கப்பட்டுவிட வில்லை!

இவை, உச்சரிக்கும் முறையின்படியே இப்படி வைக்கபட்டன.


உச்சரிப்பின்படி இவற்றை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர்


இதை எல்லாரும் படித்திருப்போம்-

வல்லின எழுத்துகள் – க ச ட த ப ற (இவை ஆறும், வன்மையாக நெஞ்சிலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே வல்லெழுத்துகள்)

மெல்லின எழுத்துகள்–ங ஞ ண ந ம ன (இவை ஆறும், மென்மையாக மூக்கிலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே மெல்லெழுத்துகள்)

இடையினஎழுத்துகள்–ய ர ல வ ழ ள (இயை ஆறும் வன்மையாகவோ மென்மையாகவோ அன்றி இடைப்பட்ட கழுத்திலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே இவை இடையினம்)  இதுவும் தெரிஞ்சதுதான்.


எளிமையாகச் சொல்லக் கூடிய இந்த வல்லின, மெல்லின, இடையின எழுத்துகளை வரிசையாகச் சொன்னாலே 18எழுத்துகள் வந்துவிடும்.

கசடதபற ஙஞணநமன யரலவழள – 18எழுத்து வருதுல்ல..? இப்படியே இவை மூன்று வகையையும் வரிசைப்படுத்தாமல் கஙசஞடண என்று ஒரு புதிய வரிசையைக் கண்டுபிடித்து வைத்ததற்குக் காரணம் உண்டு.


சொற்களில், மெல்லினத்தை அடுத்து 

வல்லின எழுத்துகள் வரும்.

(ஆனால் எழுத்து வரிசையில் வல்லினத்தை அடுத்து மெல்லினம் வருவதற்கு சொல்முறை எளிமையே காரணமாக இருக்கலாம்)


க ங – எங்கே – ங் க 

ச ஞ – மஞ்சள் – ஞ் ச

ட ண – துண்டு – ண் ட

த ந -  வந்தது – ந் த  

ப ம – பம்பரம் – ம் ப


இடையின ஆறெழுத்தும் 

அவற்றின் பெயருக்கேற்ப 

(உச்சரிப்பும் வன்மையாகவும் இன்றி 

மென்மையாகவும் இன்றி இடையினமாக) 

செருகப்பட்டு, கடைசியாக

ற ன – சென்றது – ன் ற


அவ்வளவு தாங்க...


உலகே இந்த இரட்டை எதிர்த்துருவ 

ஈர்ப்பில் தானே இயங்குகிறது??!!

நெட்டை னா குட்டை

பள்ளம் னா மேடு

தொப்பை னா சப்பை

ஆணுன்னா பெண்.

வல்லினம் னா மெல்லினம். (அப்படின்னா பெண்கள் லாம் மெல்லிய மலர்தானா ன்னா , அது அவங்கவுங்க பார்வையப் பொறுத்தது. முரண்படும் இருவரில் ஒருவர் அனுசரித்துப் போவதுதான் வாழ்க்கை. அது ஆணா பெண்ணா என்பது அவரவர் விருப்பம், சூழல்.               ரெண்டும் வெடச்சிக்கிட்டு நின்னா வேதனைதான்)


ஒரு கிலோ அல்வா ஒரே மூச்சுல சாப்புட முடியுமா?

முடியும் னு நினைக்கலாம் ஆனா சாப்பிட முடியாது.

அதே அல்வாவோடு, கொஞ்சம் காராபூந்தி சேத்துக்கிட்டா கொஞ்சம் கொஞ்சமா ரெண்டையும் சாப்பிட்டு விடலாம்ல... அப்படித்தான்! வல்லினத்தை அடுத்து மெல்லினம் அமைக்கப்படுவது தமிழியல்பு.


இதே மாதிரித்தான் -

சின்ன ர என்பதும் தவறு!

பெரிய ற என்பதும் தவறு! 


ர - இதனை, இடையின ர கரம் என்பதே சரியானது 

- மரம், கரம், உரம்


ற - இதனை வல்லின ற கரம் என்பதுதான் சரி 

- மறம், அறம், முறம்


இதுல ஒரு வேடிக்கை பாருங்ளேன்!

சிறிய என்னும் சொல்லில் பெரிய ற வருது!

பெரிய என்னும் சொல்லில் சிறிய ர வருது!


வல்லினத்துக்கும் மெல்லினத்துக்கும் 

இடையில வர்ரது இடையினம்.


அட நம்ம நடுத்தர வர்க்கம் னு வச்சிக்குங்களேன்...


வலுத்த கோடீஸ்வர வர்க்கம் (வல்லின எழுத்து)

வறுமைப் பட்ட ஏழை வர்க்கம் (மெல்லின எழுத்து)

இடையில லோல் படுற நடுத்தர வர்க்கம்! (இடையின எழுத்து)


வாழ்க்கை முறையை

இப்படி எழுத்து அமைப்பிலும் வச்ச

நம்ம தாத்தமாரு-பாட்டிமாருக

எப்பேர்ப்பட்ட ஆளா இருக்கணும்? யோசிங்க...


இதுல வல்லெழுத்து ரெண்டும் சேர்ந்து வராது.

சிலபேரு “முயற்ச்சி“ னு எழுதறது தப்பு.

என்னதான் கடுமையான முயற்சியா இருந்தாலும்

அது முயற்சிதான் ! 


இதே மாதிரித்தான் 

உயிரெழுத்தில் 

அ-ஆ

இ-ஈ

உ-ஊ

எ-ஏ

 ஐ-இ  

ஒ-ஓ - என வரும இன  எழுத்துகள் 

கவிதை எழுதுவோர்க்கு இந்த எதுகை மோனை 

(ஓசை ஒழுங்கு) அறிந்து 

எழுத்துகளைப் போட்டால் கவிதை சுவைக்கும், 

படிப்பவர் நினைவில் நிலைக்கும்.


காக்கைகளின் அந்தரங்க இல்வாழ்க்கை!

காக்கைகள் பற்றிய ஏராள ரிலிஜியஸ் நம்பிக்கைகள் இந்தியாவில் உண்டு.சனிபகவானின் வாகனமாகத் துதிக்கப்படும் இப் பறவைக்குத்தான் பித்ருக்களுகான பிண்டம...