கால்நடை மருத்துவர் பக்கம்
A page of Veterinary Doctor's collection!
27 September, 2025
காக்கைகளின் அந்தரங்க இல்வாழ்க்கை!
படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம்: ஒரு ஆய்வின் தகவல்
இந்த ஆய்வு. இவற்றுக்கெல்லாம் மேலாக, இருக்கவே இருக்கிறது பழமையான ஒரு முறை. அது தான் புத்தகம் படிப்பது. இதுவும் தூக்கத்தை வரவழைக்கிற விஷயங்களில் முக்கியமானது தான். துணையுடன் பேசிக்கொண்டே தூங்கிபோகிறவர்களும் இருக்கிறார்கள். விசித்திரமாக, கடிகாரத்தின் டிக் டிக் ஒசை, சாலையில் செல்லும் வாகனங்களின் சப்தம், வேக்குவம் க்ளீனர் மற்றும் ஹேர் ட்ரையரின் சப்தமும் தூக்கத்தை வரவழைக்கும் விஷயங்களின் பட்டியலில் இடம் பெறுகின்றன. இவையத்தனைக்கும் வில்லனாக இருப்பது பக்கத்தில் தூங்குபவரின் குறட்டை சத்தம் என்று ஆத்திரப்படுகிறார்கள் உண்மையில் பாதிப்புக்குள்ளானவர்கள்.சாப்பிட்ட உடன் `செக்ஸ்’ வைத்துக் கொள்ளலாமா?
மலைப் பாம்பின் இறைச்சி இனிப்பாக இருக்குமாமே?
பர்மீஸ் (Burmese Python (Python molurus bivittatus) ) மலை பாம்பு ரகங்கள் செல்ல பிராணிகளாக வளர்க்கப்படுகிறதாம்! அதில் கேரமல்பர்மீஸ் ரகம் பார்க்க கொள்ளை அழகு!
மேக்ஸிமம் அளவிற்கும் விரிக்ககூடிய தன்மையை கொண்ட தாடை எலும்புகள் இணைக்கப்படாத வாயை பிளந்து கொண்டு தன்னுடைய பிளவு நாக்கின் (Vomeronasal organ) உணர் சக்தி, மற்றும் மோப்ப சக்தி மூலம் இரையை நோக்கி வேகமாக முன்னேறும் போது விலா எலும்புகளின் அலைஅலையான
இயக்கத்தை பயன்படுத்தி ஒரே நேர்கோட்டில் செல்லும். அப்பொழுது துளி கூட
உடலை நெளிக்காது. இரையை நெருங்கியவுடன் தன் வால் பகுதியை வீசி
இரையின் உடலை ஒன்றிரண்டு சுற்றுகள் சுற்றி இறுக்கிப் பிடித்துக் கொள்ளும். பிடியை மென்மேலும் இறுக்குவதால் இரை சுவாசத்துக்கு ஏங்கி உயரிழக்கும். இறந்த இரையின் உடல் முழுவதையும் ஒரு முறை நாக்கால் முகர்ந்து பார்த்து விட்டு (ஆம் பாம்புக்கு நாக்குதான் மூக்கு) படிபடிப்படியாக விழுங்கத் தொடங்கும். முன் ஜாக்கிரதையாக தலையைத்தான் முதலில் விழுங்கும். அதன் பின் அளவற்றுச் சுரக்கும் உமிழிநீரின் உதவியோடு கொஞ்ச கொஞ்சமாக ஸ்லோமோஷனில் டைட்டானிக் கப்பல் போல இரை உள்ளே போய்க் கொண்டிருக்கும். உள்ளே விழுங்கப்படும் இரை தப்பி வெளியே வராமல் இருக்க மலைபாம்பின் பல் அமைப்பு உள்ளே வளைந்து சிறப்பு ஒன்வே லாக்காக இருக்கும். இப்படியொரு நல்ல விருந்தை முடித்துக் கொண்ட மலைப்பாம்பு இடத்தை விட்டு நகர முடியாமல் அசைவற்றுக்கிடக்கும் வலுக்கட்டாயமாக நகர வைத்தால் விழுங்கிய இரையின் கொம்புகள், நகங்கள், பற்கள் போன்ற கூரிய பகுதிகள் பாம்பின் உடலைக் கிழித்துவிடக்கூடும். அதனால் தான் இரைக்குபின் அசைவற்று படுத்து கிடக்கும். மனிதர்களின் தோள்பட்டை விரிந்துள்ளதால் மலைப்பாம்புக்கு மனிதன் வேண்டாத இரை! இருப்பினும் குழந்தைகள் கிடைத்தால் இரையாக்கிவிடும். ஒரு பெண்ணை மலைபாம்பு தாக்கி விழுங்க முயற்சி செய்துள்ளது. ஏன் விஷம் உள்ள நாகபாம்புடன் கூட மலைபாம்பு மோதியுள்ளது.
கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!!
08 November, 2020
தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!
மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை
கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன்
4சுழி 5சுழி போட்டானாம்!
என்னப்பா னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்-
“தமிழ் வளரவே கூடாதாய்யா?
ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம்
4சுழி 5சுழி இருக்கக் கூடாதா?
இது எப்படி இருக்கு?
தமிழ் எழுத்துகளில் -
ரெண்டுசுழி ன என்பதும் தவறு!
மூனுசுழி ண என்பதும் தவறு!
ண இதன் பெயர் டண்ணகரம்,
ன இதன் பெயர் றன்னகரம் என்பதே சரி.
மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழி ணகர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ட வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு டண்ணகரம் னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்?)
தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி னகரஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ற வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு றன்னகரம் னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க?)
இது ரெண்டும் என்றுமே மாறி வராது..
(இதுல கூட பாருங்களேன்? பிரியாத காதலர்கள் மாதிரிச் சேந்து சேந்தே வர்ரதப் பாருங்களேன்! இது புரியாம இதுகள நாம பிரிச்சுடக் கூடாதுல்ல?)
வேற மாதிரி சொன்னா
இதுவும் வர்க்க ஒற்றுமைதான்!
(வர்க்க எழுத்து-ன்னா,
சேந்து வர்ர எழுத்து! அவ்ளோதான்)
இந்தப் பெயரோடு (டண்ணகரம், றன்னகரம்)
இந்த ண, ன எழுத்துகளை அறிந்து கொண்டால்
எழுத்துப் பிழையும் குறையும்.
எப்புடீ?
மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல ட இருக்கா,
அப்ப இங்க மூனு சுழி ண தான் வரும்.
ஏன்னா அது டண்ணகரம்.
கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல ற இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி ன தான் வரும்.
ஏன்னா அது றன்னகரம்.
இதே மாதிரித்தான் ந கரம் என்பதை, தந்நகரம்னு சொல்லணும்
ஏன்னா இந்த ந் எழுத்தை அடுத்து
வரக்கூடிய உயிர்மெய் த மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை)
இது மாதிரி தெரிஞ்சிக்கணும் னு
நெனைக்கிறவங்க மட்டும்
தொடர்ந்து படிக்கலாம்.
(தெரிஞ்சவுங்க பின்னூட்டத்த இட்டுட்டு
அடுத்த பதிப் பார்க்கப் போகலாம்)
நல்ல உச்சரிப்புக்கு..
செய்தியாளர் ஷோபனா ரவி
தமிழில் எந்த எழுத்தின் பின் எந்த எழுத்து வரும் என்பதை அடிப்படையாக வைத்தே (க ங ச ஞ ட ண எனும் வரிசையில்) மெய்யெழுத்துகள் பதினெட்டும் வரிசைப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன.
தமிழின் மெய்யெழுத்து வரிசை அமைப்புக்கும் அர்த்தமுண்டு.
இதைப் புரிந்துகொண்டால், எழுத்துப் பிழை பெரும்பாலும் வராது. உச்சரிப்பும் தெளிவாகும். (என்ன..? இதெல்லாம் பாடத்தில் வராது!)
இது பற்றித்தான் இந்தப் பதிவு. சரியா?
உதாரணமாக-
க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன – எனும் பதினெட்டு மெய்யெழுத்துகளும் சும்மா அடுத்தடுத்து வைக்கப்பட்டுவிட வில்லை!
இவை, உச்சரிக்கும் முறையின்படியே இப்படி வைக்கபட்டன.
உச்சரிப்பின்படி இவற்றை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர்
இதை எல்லாரும் படித்திருப்போம்-
வல்லின எழுத்துகள் – க ச ட த ப ற (இவை ஆறும், வன்மையாக நெஞ்சிலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே வல்லெழுத்துகள்)
மெல்லின எழுத்துகள்–ங ஞ ண ந ம ன (இவை ஆறும், மென்மையாக மூக்கிலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே மெல்லெழுத்துகள்)
இடையினஎழுத்துகள்–ய ர ல வ ழ ள (இயை ஆறும் வன்மையாகவோ மென்மையாகவோ அன்றி இடைப்பட்ட கழுத்திலிருந்து உச்சரிக்கப்பட வேண்டும் எனவே இவை இடையினம்) இதுவும் தெரிஞ்சதுதான்.
எளிமையாகச் சொல்லக் கூடிய இந்த வல்லின, மெல்லின, இடையின எழுத்துகளை வரிசையாகச் சொன்னாலே 18எழுத்துகள் வந்துவிடும்.
கசடதபற ஙஞணநமன யரலவழள – 18எழுத்து வருதுல்ல..? இப்படியே இவை மூன்று வகையையும் வரிசைப்படுத்தாமல் கஙசஞடண என்று ஒரு புதிய வரிசையைக் கண்டுபிடித்து வைத்ததற்குக் காரணம் உண்டு.
சொற்களில், மெல்லினத்தை அடுத்து
வல்லின எழுத்துகள் வரும்.
(ஆனால் எழுத்து வரிசையில் வல்லினத்தை அடுத்து மெல்லினம் வருவதற்கு சொல்முறை எளிமையே காரணமாக இருக்கலாம்)
க ங – எங்கே – ங் க
ச ஞ – மஞ்சள் – ஞ் ச
ட ண – துண்டு – ண் ட
த ந - வந்தது – ந் த
ப ம – பம்பரம் – ம் ப
இடையின ஆறெழுத்தும்
அவற்றின் பெயருக்கேற்ப
(உச்சரிப்பும் வன்மையாகவும் இன்றி
மென்மையாகவும் இன்றி இடையினமாக)
செருகப்பட்டு, கடைசியாக
ற ன – சென்றது – ன் ற
அவ்வளவு தாங்க...
உலகே இந்த இரட்டை எதிர்த்துருவ
ஈர்ப்பில் தானே இயங்குகிறது??!!
நெட்டை னா குட்டை
பள்ளம் னா மேடு
தொப்பை னா சப்பை
ஆணுன்னா பெண்.
வல்லினம் னா மெல்லினம். (அப்படின்னா பெண்கள் லாம் மெல்லிய மலர்தானா ன்னா , அது அவங்கவுங்க பார்வையப் பொறுத்தது. முரண்படும் இருவரில் ஒருவர் அனுசரித்துப் போவதுதான் வாழ்க்கை. அது ஆணா பெண்ணா என்பது அவரவர் விருப்பம், சூழல். ரெண்டும் வெடச்சிக்கிட்டு நின்னா வேதனைதான்)
ஒரு கிலோ அல்வா ஒரே மூச்சுல சாப்புட முடியுமா?
முடியும் னு நினைக்கலாம் ஆனா சாப்பிட முடியாது.
அதே அல்வாவோடு, கொஞ்சம் காராபூந்தி சேத்துக்கிட்டா கொஞ்சம் கொஞ்சமா ரெண்டையும் சாப்பிட்டு விடலாம்ல... அப்படித்தான்! வல்லினத்தை அடுத்து மெல்லினம் அமைக்கப்படுவது தமிழியல்பு.
இதே மாதிரித்தான் -
சின்ன ர என்பதும் தவறு!
பெரிய ற என்பதும் தவறு!
ர - இதனை, இடையின ர கரம் என்பதே சரியானது
- மரம், கரம், உரம்
ற - இதனை வல்லின ற கரம் என்பதுதான் சரி
- மறம், அறம், முறம்
இதுல ஒரு வேடிக்கை பாருங்ளேன்!
சிறிய என்னும் சொல்லில் பெரிய ற வருது!
பெரிய என்னும் சொல்லில் சிறிய ர வருது!
வல்லினத்துக்கும் மெல்லினத்துக்கும்
இடையில வர்ரது இடையினம்.
அட நம்ம நடுத்தர வர்க்கம் னு வச்சிக்குங்களேன்...
வலுத்த கோடீஸ்வர வர்க்கம் (வல்லின எழுத்து)
வறுமைப் பட்ட ஏழை வர்க்கம் (மெல்லின எழுத்து)
இடையில லோல் படுற நடுத்தர வர்க்கம்! (இடையின எழுத்து)
வாழ்க்கை முறையை
இப்படி எழுத்து அமைப்பிலும் வச்ச
நம்ம தாத்தமாரு-பாட்டிமாருக
எப்பேர்ப்பட்ட ஆளா இருக்கணும்? யோசிங்க...
இதுல வல்லெழுத்து ரெண்டும் சேர்ந்து வராது.
சிலபேரு “முயற்ச்சி“ னு எழுதறது தப்பு.
என்னதான் கடுமையான முயற்சியா இருந்தாலும்
அது முயற்சிதான் !
இதே மாதிரித்தான்
உயிரெழுத்தில்
அ-ஆ
இ-ஈ
உ-ஊ
எ-ஏ
ஐ-இ
ஒ-ஓ - என வரும இன எழுத்துகள்
கவிதை எழுதுவோர்க்கு இந்த எதுகை மோனை
(ஓசை ஒழுங்கு) அறிந்து
எழுத்துகளைப் போட்டால் கவிதை சுவைக்கும்,
படிப்பவர் நினைவில் நிலைக்கும்.
காக்கைகளின் அந்தரங்க இல்வாழ்க்கை!
காக்கைகள் பற்றிய ஏராள ரிலிஜியஸ் நம்பிக்கைகள் இந்தியாவில் உண்டு.சனிபகவானின் வாகனமாகத் துதிக்கப்படும் இப் பறவைக்குத்தான் பித்ருக்களுகான பிண்டம...
-
காளான் வளர்ப்பு பிரபலமாகி வருகிறது. தாவரவியல் பேராசிரியர் ராஜேந்திரன் காளான்கள் குறித்து நீண்ட காலமாக ஆய்வு செய்து வருகிறார். அவ்வப்போத...
-
பெண்களின் செழிப்பான அழகுக்கு மேலும் அழகு சேர்ப்பவை மார்பகங்கள். அவை அளவோடு இருந்தால்தான் அழகு. அளவு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ அங்கே அ...
-
காக்கைகள் பற்றிய ஏராள ரிலிஜியஸ் நம்பிக்கைகள் இந்தியாவில் உண்டு.சனிபகவானின் வாகனமாகத் துதிக்கப்படும் இப் பறவைக்குத்தான் பித்ருக்களுகான பிண்டம...
















