30 September, 2016

தேன் கொடுத்தால் குழந்தைகள் நன்றாக பேசுமா?

பச்சிளம் குழந்தைகளுக்கு தேன் ஏன் தரக்கூடாது ?

          தேன் என்றாலே  உயர்வானது , எல்லா வியாதிக்கும் அருமருந்து  என்ற கருத்து பரவலாக  உள்ளது . மேலும் குழந்தைகளுக்கு கொடுத்தால் நன்றாக பேசும் திறன் வரும் என்றும் நம்பிக்கை உள்ளது.ஆனால் தேன் மலரில் உள்ளபோது  சுத்தமாகவே உள்ளது பின்பு  தேனீயால் எடுக்கப்பட்டு  தேன்கூட்டில்  சேகரிக்கப்பட்டு அதனை  எடுத்து நாம் உபயோகிக்கும்போது   அதில்  அலர்ஜியை உண்டாக்கும்  மகரந்த  தூள்களும்  , மிக  கடுமையான  பொடுலிசம்(BOTULISM ) என்ற  வியாதியை  உண்டாக்கும்   Clostridium bacteria  இருக்கலாம் .


எனவே குழந்தைகளுக்கு  குறிப்பாக  ஒரு வயதுக்கு  குறைவான  குழந்தைகளுக்கு தேன் தரவே கூடாது .


BOTULISM  வந்தால்  தெரியும் அறிகுறிகள் :(பச்சிளம் குழந்தைகள் )
  
உடல் தளர்ச்சி -குழந்தையை  தூக்கினால் விறைப்பாக இல்லாமல் தளர்வாக இருப்பது 

பால் குடிக்க  மறுப்பது

சோம்பலாக   அழுவது (WEAK  CRY )

மலச்சிக்கல்


எனவே தேனை  நேரடியாகவோ  மறைமுகமாகவோ ஒரு வயது  குறைவான குழந்தைகளுக்கு உபயோகிக்க  கூடாது  .

           


அலர்ஜி , ஆஸ்த்மா  உள்ள குழந்தைகளுக்கு ஒரு வயதுக்கு பின்னும்  தேன் தராமல் இருப்பது  நல்லது -நன்றி டாக்டர்.ராஜ்மோகன்

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...