10 March, 2012

புகைப் பிடிப்பவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய இடுகை!



புகைப் பிடிக்கும் ஒருவருக்கு உச்சி முதல் உள்ளங் கால் வரை என்ன பிரச்சினைகள் வரலாம் என்பதை பட்டியல் இட்டிருக்கிறேன்!

முடி :
  • நிற மாற்றம்
மூளை :
  • பாரிசவாதம்
  • புகைத்தலுக்கு அடிமையான நிலை
கண் :
  • பார்வைக் குறைபாடு
  • Cataracts
மூக்கு :
  • மன நுகர்ச்சித் தன்மை குறைதல்
தோல் :
  • தோல் சுருக்கம்
  • வயது முதிர்ந்த தோற்றம்
பல் :
  • நிற மாற்றம்
  • பதிவுகள்
  • பல்லின் மேற்புறத்தில் ஏற்படும் அழற்சி (gingivitis)
வாய் மற்றும் தொண்டை :
  • உதடு மற்றும் தொண்டை புற்று நோய்
  • உணவுப் பாதை புற்று நோய்
  • சுவை நுகர்ச்சி குறைதல்
  • கெட்ட வாசனை
கை :ரத்த ஓட்டம் குறைதல்
நிக்கேட்டின் படிவுகள்

சுவாசப் பை :
  • சுவாசப் பை புற்று நோய்
  • நாட்பட்ட சுவாச அடைப்பு நோய் (COPD)
  • சுவாசப் பைத் தொற்று(நியுமோனியா)
  • கச ரோகம் (டப்)
  • ஆஸ்துமா
இதயம் :
  • மாரடைப்பு
ஈரல் :
  • புற்று நோய்
வயிறு :
  • அல்சர்
  • குடல் , இரப்பை,சதையி புற்று நோய்
  • நாடி வெடிப்பு(Aortic அனஐர்ய்சம்)
சிறு நீரகம் :
  • புற்று நோய்
  • சிறு நீர்ப் பை புற்று நோய்
எலும்பு :
  • எலும்பின் உறுதி குறைதல்
இனப்பெருக்கத் தொகுதி :
  • விந்துகளின் வீரியம் மற்றும் எண்ணிக்கை குறைதல்
  • குழந்தையின்மை
  • ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைதல்
இரத்தம் :
  • புற்று நோய்
கால் :குருதிச் சுற்றோட்டம் குறைந்து கால் பகுதியில் நோய் மற்றும் காயம் ஏற்படல்


  • நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல்

இனி அடுத்த முறை புகைப் பிடிக்கும் போது இவற்றை நினைத்துக் கொண்டே ஆனந்தமாக? புகை பிடியுங்கள் ....

ஒரு கொசுறு செய்தி!



தினமும் ஒரு பாக்கெட் சிகரட் வாங்குவதற்கு பதில் உலர் திராட்சை பாக்கெட் அல்லது 100 கிராம் வாங்கி வைத்து கொள்ளுங்கள். சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டு சுவையுங்கள்.

மிகவும் முக்கியமான மருத்துவ குணம் கொண்ட உலர் திராட்சை (கிஸ்மிஸ்) பழம், புகை பிடிப்பவர்களை தடுக்கும் அறுமருந்து. ஆம் புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர்திராட்சை கரைத்து விடுகிறது.

மேலும் புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர்திராட்சைகளை சாப்பிடும் பொழுது அதன் இனிப்பு கரைசல் புகைப்பிடிக்க தூண்டும் உணரவை கட்டுப்படுத்துகிறது.

இது சைனாவில் பிரபலம் நமக்கு காசு கொடுத்தால் மட்டுமே நல்ல மருத்துவத்தை சொல்லும் சில சிறந்தநாட்டு மருத்துவர்கள் கூட இந்த உண்மையை சொல்வதில்லை, இதை நீங்களும், உங்கள் உயிரான உறவுகளிடம் சொல்லி புகைபழக்கத்தை ஒழிக்க சிறந்த வழி...

01 March, 2012

பால் ஆடை-சருமத்திற்கு நல்லது


பாலில் நமக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் இருக்கின்றன. கால்சியம், புரோட்டீன் மற்றும் -ஊட்டச் சத்து அதிகமுள்ள பாலைப் பருகுதல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. பால் உடலுக்கு எப்படி சக்தியைக் கொடுக்கிறதோ, அப்படியே நம் சரும அழகுக்கும் பால் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பால் சிறந்த மாய்சரைசராகவும், க்ளென்சராகவும் பயன்படுகிறது.

சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும் பால் உதவும். ஆடை எடுக்கப்பட்ட பால் எல்லாவித சரும வகைக்கும் ஏற்றது. முகத்தில் பேக் போடும் பவுடருடன்,பால் கலந்து உபயோகிக்கலாம். ஏடோடு இருக்கும் பால் உலர் சருமத்திற்கு ஏற்றதாகும். எண்ணெய் சருமத்திற்கு ஆடை எடுக்கப்பட்ட பால் அல்லது மோர் உபயோகிக்கலாம். கண்களின் அடியில் உள்ள கருவளையத்தைப் போகக்க பாலாடை க்ரீம் பூசுவது நல்லது.

இது வெளியில் தனியாகக் கிடைக்கும்) தோலில் அடிக்கடி அரிப்பு ஏற்படுபவர்களுக்கும் அதிகமாக பயணம் மேற்கொள்பவர்களுக்கம் பால் நல்லது. காய்ச்சாத பாலில் பஞ்சை நனைத்து, முகத்தில் பூசி சிறிது நேரத்தில் குளிர்ந்த நீரில் கழுவினால், முகம் பளிச்தான். மோர் எண்ணெய் வழியும் சருமத்திற்கு மோரில் பஞ்சை நனைத்து முகம், கழுத்தில் தடவி 10 அல்லது 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கழுவினால், முகம் பளிச்சென்று இருக்கும்.

பல அழகுக் குறிப்புகளில் மோரின் உபயோகம் கொடுக்கப்பட்டிருக்கிறது). தயிர் தயிரை முகத்தில் அப்படியே தடவினால் அதிலுள்ள கொழுப்புச் சத்து சருமத் துவாரங்களை அடைத்து விடும். குறிப்பாக எண்ணெய் சருமம் உடையவர்கள், தயிரை முகத்திற்கு உபயோகிக்கக்கூடாது. தலை முடிக்கு தயிரை சிறந்த கண்டிஷனராக உபயோகப்படுத்தலாம். மருதாணிப் பவுடர் + தயிர் அல்லது வெந்தயப் பவுடர் + தயிர் உபயோகப்படுத்தி தலைத் தேய்த்து முடியை அலசலாம்.

வெண்ணெய் கடையில் வாங்கும் வெண்ணெயை விட வீட்டிலேயே சேர்த்துத் தயார் செய்யும் வெண்ணெயில் வைட்டமின் அதிகம் உள்ளது. முகத்திற்கு மசாஜ் செய்ய வெண்ணெய் பயன்படுத்தலாம். ஆனால் முகத்தில் பருக்கள் உள்ளவர்கள் வெண்ணெய் உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். வெண்ணெயைத் தலையில் தேய்த்து தலைமுடியை அலசலாம். உதடுகள் கறுப்பாக இருப்பவர்கள் சிறிதளவு வெண்ணெயை உதட்டில் தினமும் தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதனால் உதட்டிலுள்ள கருமை நிங்க, இயற்கையான ரோஸ் நிறம் கிடைக்கும். இதை தடவி அதை தடவி எலி கிலி பிறாண்டி விட்டு உள்ளதும் முதலுக்கே மோசம் ஆகிவிட்டால் நாங்கள் பொறுப்பல்லா! ஜாக்கிரதையாக இருந்துகொள்ளுங்கள்!!

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...