25 December, 2011

தூக்கம் தேடும் விழிகள்: தூக்கம் பற்றிய அறிவியல் ஆய்வு

தூக்கத்தை தொலைத்து எதையெதையோ தேடி பெறுவதாகத்தான் அமைகிறது பலருக்கும் இந்த வாழ்க்கை. பணம், பதவி, புகழ் என எல்லாம் இருந்தும் என்ன விலை கொடுத்தும் வாங்க முடியாததாக தூக்கம் சிலருக்கு கண்களுக்கெட்டாத தூரத்திற்கு போய்விடுவதும் உண்டு. எது எப்படியோ ஒரு முழு நாளைய சோர்வின் மிச்சங்களை சலவை செய்யும் ஓர் உன்னதமான செயல் தூக்கம் என்பதை யாரும் மறுக்க முடியாது. 
        தூக்கம் என்பது நாள் முழுவதும் நாம் செலவிட்ட ஆற்றலை மீட்டெடுக்கும் நிலை. தூக்கம் முறையாக இல்லை என்றால் உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம், இதய நோயகள், மூளை தொடர்ப்பன குறைபாடுகள் என பல்வேறு நோய்களுக்கு நாம் ஆளாக வேண்டி இருக்கும். இது தொடர்பாக, மனநல ஆரோக்கிய அமைப்பை சேர்ந்த மருத்துவர் ஆன்ட்ரூ மேக்கல்லோச் கூறும்போது, உடற்பயிற்சி மற்றும் சரிவிகித உணவு ஆகியவற்றுக்கு போதுமான முக்கியத்துவம் தரும் நம்மில் பலர் உடல்நலம் மற்றும் மனநலம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் தூக்கத்தில் அக்கறை செலுத்துவதில்லை. இதனால் நமக்கு ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகள் தூக்கம் தொடர்பானவையாகவே அமைந்துவிடுகிறது என கூறினார். 

16 December, 2011

நன்றிகள் பலமுறை சொல்லி - 3ம் பாகம்......................தொடர்கின்றது.

எதிர்பாரா விதமாகவும் தொடராகவும் அமைந்து விட்ட என் தொழில் சார்ந்த ஐரோப்பிய நாட்டு பயணங்களால் தடையாகி போன என் தொடர் நிமித்தம் மன்னிப்பு கேட்டவனாக  இதனை தொடர்கின்றேன்.....
1986-ம் ஆண்டு ஆங்கில தினசரியில் வந்த அந்த விளம்பரம் :  "கால் நடை மருந்துகள் விற்பனை செய்யும் அனுபவமுள்ள ஒரு கால் நடை மருத்துவர் மஸ்கட்டிலுள்ள ஒரு நிறுவனத்திற்கு தேவை" - படித்தததும் நான் தேட ஆரம்பித்ததது வீட்டிலுள்ள உலக வரைப்பட புத்தகத்தைதான்....! 'மஸ்கட்' என்பதை ஒரு இனிப்பாக மட்டுமே சாப்பிட்டு அனுபவப்பட்ட நான் இந்த பெயரில் ஒரு ஊர் இருப்பதையே அப்போதுதான் அறிய ஆரம்பித்தேன். விண்ணப்பித்தேன்.  அகில இந்தியாவிலிருந்தும் ஒரேயொரு நபரையே தேர்வு செய்வதாக அறியப்பட்ட நிலையில்
5 மாதங்கள் உருண்டோடியதில் விண்ணப்பித்ததே மறந்து போயிருந்த ஒரு நாளில், பம்பாயிற்கு நேர்முகத் தேர்வுக்கு வரச் சொல்லிய கடிதம் ஆச்சரியமாக வந்தது. ரயிலில் பம்பாய் போய் நேர்முகத் தேர்வுக்கு போய் அமர்ந்த போதுதான் தெரிய வந்தது...அகில இந்தியாவிலிருந்தும் மொத்தம் 1400 மருத்துவர்கள் விண்ணப்பித்திருந்ததில், 300 பேர் அழைக்கப்பட்டிருந்ததில் நானும் ஒருவன் என்பது....! இந்த ஒரே காரணத்திற்காகவே எனக்கு அந்த வேலை கிடைக்காதென்றே ஒரு முடிவு தெரிந்த ஒரு முடிவுக்கு வந்தவனாக நடுக்கமும் பதட்டமும் முற்றிலும் இல்லாதவனாக அறைக்குள் நுழைந்தேன். வழக்கமான கேள்விகளெல்லாம் முடிந்து சம்பிரதாயமான கை குலுக்கள் முடிந்து தேர்வு முடியும் நேரம் நான் அங்கிருந்த 5 நபர்களிடம் ஒரு 2 நிமிடம் எனக்காக ஒதுக்க முடியுமா எனக் கேட்டேன். காரணம்... வளைகுடா நாடுகளில் வெறும் ஒட்டகம் மட்டுமே இருப்பதாக எண்ணியிருந்த எனக்கு அங்கு ஒரு விற்பனைக்காக கால்நடை மருத்துவரை தேர்வு செய்ய ஒரு நிறுவனம் இந்தியா வந்திருந்தது (1986ம் ஆண்டு காலக் கட்டத்தில்) மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. என் கேள்விகளை ஆரம்பித்தேன்...ஒட்டகம் தவிர என்னென்ன கால்நடைகள், அவைகளின் நோய்கள், மருத்துவ வசதிகள், வாய்ப்புகள், மருத்துவர்கள், மருந்து விற்பனை செய்யும் நிறுவனங்கள்...என என் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொன்ன நபர்களிடம் விடை பெற்று, ரயிலேறி சென்னை வந்து இறங்கினேன். ஒரு பதட்டமுமில்லாதவனாக 'சும்மா' பம்பாய் போய் வந்த அனுபவமாகவே எடுத்துக் கொண்ட எனக்கு ஒரு 10 நாட்கள் கழிந்து  நான் அந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டதாக தந்தி வந்த போது என்னால் நம்பவே முடியவில்லை..எல்லா ஏற்பாடுகளும் முடிந்து நான் Air India மூலம் மஸ்கட் விமான நிலையத்தில் கால் பதித்த அந்த தினம் 1987 மார்ச் 8ம் நாள். உலகப் புகழ் பெற்ற நிறுவனங்களான Pfizer, Cooper, Beecham, Hoechst, Intervet, Rhone Meriux, SKF தயாரிப்புகளை ஒமான் நாட்டின் கால்நடை (பசு, கோழி, ஆடு, ஒட்டகம்) பண்ணைகளில் விற்பனை செய்யும் பணி. புதிய சூழ்நிலைகள் ஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்களை கற்றுத் தந்தது மட்டுமல்லாமல், மேற்படி நிறுவனங்கள் விற்பனை பயிற்சிகளுக்காக அழைத்ததால் என்னை France, Cyprus, Germany, UK என பயணிக்க வைத்தது. என் குடும்பமும் என்னை வந்தடைய, மஸ்கட்டில் என் வாழ்க்கை ஒரு சீரான, தொடராக 4 ஆண்டுகளை பின் தள்ளி 1991ம் ஆண்டினுள் அடியெடுத்த வைத்த ஒரு நா ளில், நான் என் நிறுவன மேலாலரிடன் எனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தேன்........................

தொடரும்.....      இதற்கு முந்தைய பகுதியை படிக்க...

14 December, 2011

வயாகரா பாவிப்பவர்களுக்காகவும் பாவிக்க நினைப்பவர்களுக்காகவும்

விறைக்க அடம்பிடிக்கும் ஆணுறுப்புக்கள்

பாலியல் தொடர்பில் ஆண்களினிடையே இருக்கும் ஒரு பொதுவான நோய் விறைக்க மறுக்கும் ஆணுறுப்புக்கள். ஆங்கிலத்திலே இது impotence எனப்படுகிறது.

இந்த நிலை பல நோய்களினால் ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் இருந்தாலும் , இளம் வயதிலே இந்த நிலை ஏற்படுவது, மனநிலை சம்பந்தப்பட்டது.

ஒரு இளம் ஆண் இந்த குறைபாட்டைக் கொண்டிருந்தால் அதற்குரிய காரணமாக இருக்கக் கூடியது,

  1. செக்ஸ் மீது அவருக்குரிய அச்ச மனநிலை.
  2. அளவுக்கதிகமான வேலைப் பளு மற்றும் மன அழுத்தம்
  3. தன் துணையோடு ஏற்படும் தர்க்கங்கள்
  4. மன அழுத்த நோய்
  5. இவை எல்லாவற்றிற்கும் மேலாக தன்னால் செக்ஸ் கொள்ள முடியுமா என்றஅச்சமும் தன்னம்பிக்கை இல்லாமையுமே ஆகும்

இது தவிர வேறு பல காரணங்களாலும் இந்த நிலைமை ஏற்படலாம். ஆனால் இவை சற்று வயதானவர்களிலே ஏற்படுவதாகும்.அவையாவன,

  1. மது
  2. புகைத்தல்
  3. நீரழிவுநோய்
  4. உயர்குருதிஅமுக்கம்
  5. ஈரல்பாதிப்பு
  6. சிறுநீரகநோய்
  7. பாரிசவாதநோய்
  8. மனஅழுத்தநோய்
வயாகரா எனப்படுவது உண்மையில் சில்டநேபில் (SILDANAFIL) என்ற பதார்த்தத்தைக் கொண்ட மாத்திரையின் உற்பத்திப் பெயராகும்.
இது ஆணுறுப்பில் ரத்தத்தை தேக்கி வைப்பதன் மூலம் அதிக நேரம் விறைப்புத் தன்மையை பேண உதவுகிறது.
வயாக்ரா ஆனது 25mg, 50mg, 100mg என்ற அளவுகளிலே கிடைக்கப் படுகிறது.

வயாகரா மாத்திரை உட்கொண்டு அரை மணிநேரத்திலேயே ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு உயர் அளவை அடைந்து விடும். இதனால்தான் இந்த மாத்திரை உடலுறவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் உட்கொள்ளப் பட வேண்டும் என அறிவுறுத்தப் படுகிறது.

ஆனால் இந்த மாத்திரை கொழுப்பு நிறைந்த உணவுகளோடு உட்கொள்ளப் பட்டால் இது உறிஞ்சப்பட்டு ரத்தத்தை அடைவது தாமதமாகும்.

இதய நோயாளிகள் , குறிப்பாக அவர்கள் அவர்களுடைய இதய நோய்க்கு மாத்திரைகள் பாவிப்பவர்களேயானால் வைத்தியரின் ஆலோசனை இல்லாமல் இந்த மாத்திரையை உட்கொள்ளுவதை தவிர்க்க வேண்டும். தவிர்க்கவேண்டும் என்ன! சாப்பிடவே கூடாது.

இதய நோய்க்கு உட்கொள்ளும் சில மாத்திரைகளோடு வயாகரா உட்கொள்ளப் பட்டால் உயிருக்கே ஆபத்தாகலாம். குறிப்பாக ISMN /ISDN எனப்படும் மாத்திர வகை இருதய நோய்க்கு கொடுக்கப்படும் ஒரு மாத்திரையாகும் இதனோடு வயாகரா உட்கொள்ளப்பட்டால் அவர்களின் ரத்த அழுத்தம் குறைந்து உயிருக்கு ஆபத்தாகலாம்.


வயகரா மாத்திரை உட்கொள்ளுபவர்கள் கீழ்வரும் பக்க விளைவுகளைக் கூட அனுபவிக்கலாம்,

  1. தலையிடி
  2. வயிற்று நோய்
  3. வாந்தி
  4. வாந்தி வரும் உணர்வு
  5. வயிற்றோட்டம்
  6. பச்சை மற்றும் நீல நிறங்களை வேறுபிரிக்க முடியாமை

போன்ற பக்க விளைவுகளும் ஏற்படலாம்.
கீழே காணும் வஸ்து இயற்கை தந்த வயகரா! இதில் ஆபத்தானஎதிர் விளைவு எதுவும் இல்லை!
முருங்கை காய்

10 December, 2011

சம்பாதிக்கலாம் வாங்க...காளான் வளர்ப்பு இலவச பயிற்சி

 காளான் வளர்ப்பு பிரபலமாகி வருகிறது.  தாவரவியல் பேராசிரியர் ராஜேந்திரன் காளான்கள் குறித்து நீண்ட காலமாக ஆய்வு செய்து வருகிறார். அவ்வப்போது விருப்பம் உள்ளவர்களுக்கு காளான் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சியும் அளித்து வருகிறார்.

காளானில் லெண்டிக்காளான், சிப்பிக்காளான், முட்டைக்காளான். மார்செல்லா என்ற மண்ணுக்கடியில் விளையும் கருப்புக்காளான்கள் ஆகியவை உணவுக்காக உற்பத்தி செய்யப்படுகின்றன. உணவுக்காளான்கள் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருக்கும். விஷக்காளான்கள் பல்வேறு நிறங்களில் இருக்கும். பால் வடியும் காளான்களும் உணவுக்கு  ஏற்றவை அல்ல.

04 December, 2011

விக்கல் ஏன் ஏற்படுகிறது?


நமது வயிற்றையும், மார்புப் பகுதியையும், `டயபரம்என்ற ஒரு பகுதி பிரிக்கிறது. சிலநேரங்களில், அதன் தசைநார்கள் திடீரென்றும், தன்னிச்சையாகவும் சுருங்கி விரிந்து செயல்படுகின்றன. அப்போது ஏற்படுவதுதான் விக்கல்.
தன்னிச்சையாக என்றால்…?
உங்கள் விரும்பமோ, தேவையோ இல்லாமல் உங்கள் கட்டுப்பாட்டையும் மீறி தானாகவே நடக்கும் செயல்பாடுதான் அது. அதாவது, அனிச்சைசெயல் போன்றது.

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...