14 வயது ஆகியும் ஒரு இளம் பெண் இன்னமும் மாதவிலக்கு ஏற்படத் தொடங்கவில்லை. அது கவலைப்பட வேண்டிய விஷயமா? பெண்கள் எட்டு முதல் 12 வயதிற்குள் பூப்பெய்துகிறார்கள். பூப்பெய்துதல் என்பது ஓரு பெண்ணுக்குள் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இந்த மாற்றங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் தன்மையை அவளுக்குள் உண்டாக்குகின்றன. இந்த மாற்றம் முழுமைபெற மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை ஆகிறது.
முதல் மாற்றம் மார்புக் காம்புகளில் ஏற்படுகிறது. காம்புகள் புடைக்கின்றன. மார்புகள் மெல்ல மெல்லப் பெரிதாகின்றன. இந்த வளர்ச்சி ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் வரை நடக்கிறது.