15 October, 2013

ஆடு தீண்டாப் பாளை-மூலிகை

ஆடுதீண்டாப் பாளை பூண்டு இனத்தைச் சேர்ந்தது. இது தென்னிந்தியாவில் திருவாங்கூரிலும், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பர்மா போன்ற நாடுகளிலும், இலங்கையிலும் அதிகம் காணப் படுன்றது.
இதனை ஆடுதின்னாப்பாளை, ஆடுதொடாப் பாளை, பங்கம்பாளை என பல பெயர்களில் அழைக்கின்றனர்.
Tamil – Adu thinna palai
English – Bracteated birth wort
Sanskri – Dhuma patra
Malayalam – Aadu tinlappala
Telugu – Gadug gudupa
Botanical Name – Aristolochia bracteata
கிரந்திகரப் பன்வெக்கை கேசநலி மாந்தை
யரந்தை வினையை யறுக்கும்துறந்து
பிரியொணா நோய்களையும் பின்முன்பா ராமல்
மறியுணா மூலியடை வாய்
(தேரையன் வெண்பா)
ஆடுதொடாப் பாளைக் ககக்கிருமி வன்சிலந்தி
நீடுகருங் குட்டம் நிறைகரப்பான்ஆடிடச் செய்
எண்பது வாய்வும் இகல்குட்ட முந்தீரும்
திண்பெருநற் றாதுவுமாஞ் செப்பு
(அகத்தியர் குணபாடம்)
உடல் வலுப்பெற
உடல் உழைப்பு குறைந்து போனதாலும், இயற்கையான ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுகளை உண்பதாலும் இன்று பலருக்கும் உடல் வலு குறைந்து வருகிறது. இவர்கள் சிறிது கடினமான வேலையை செய்தாலும் உடனே சோர்ந்துவிடுவார்கள்.
இவர்கள் ஆடுதீண்டாப் பாளை இலையை காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும்.
வயிற்றுப் பூச்சிகள் நீங்க
வயிற்றுப் பூச்சிகள் உடலில் பல தொந்தரவுகளை உண்டுபண்ணுகின்றன. இவற்றால் வயிற்றில் புண்கள் உருவாகின்றன. சிறு குழந்தைகள் இந்த வயிற்றுப் பூச்சியினால் அடிக்கடி வாந்தி பேதிக்கு ஆளாக நேரிடுகிறது.
இவர்களுக்கு ஆடுதீண்டாப் பாளையை நிழலில் உலர்த்தி நன்றாக பொடி செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து அதில் தேன் கலந்து கொடுத்து வந்தால் வயிற்றுப் பூச்சிகள் விரைவில் நீங்கும்.
நீர்மலம் நீங்க
மலமானது நீராக வெளியேறுவதால் உடலில் பல நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டாகிறது. இந்த நீர் மலம் நீங்க ஆடுதீண்டாப் பாளை இலைகளை உலர்த்தி கஷாயம் செய்து அருந்தி வருவது நல்லது.
பூச்சி கடிகளுக்கு
சில சமயங்களில் வண்டுகள், பூச்சிகள் கடிப்பதால் விஷமுண்டாகி சருமத்தில் தடிப்பு, கொப்புளம் போன்று உண்டாகும்.
இதற்கு ஆடுதீண்டாப்பாளை இலைகளை எடுத்து அரைத்து பூச்சி கடித்த இடத்தில் பற்று போட்டால் விஷம் முறியும். தடிப்புகள் மேலும் சருமத்தில் பரவாமல் தடுக்கும்.
கரும்படை கரப்பான் நீங்க
ஆடுதீண்டாப் பாளை இலைகளை அரைத்து தோலில் ஏற்படும் கரும்படை கரப்பான் இருக்கும் இடங்களில் பூசி வந்தால் விரைவில் குணமாகும்.
தலைமுடி உதிர்வதைத் தடுக்க
தலையில் முடி கொட்டுகிறது என்ற கவலை உள்ளவர்கள் ஆடுதீண்டாப் பாளை இலைகளை எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி சீயக்காய் தூளுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி கொட்டுவது உடனே நிற்கும்.
பெண்களுக்கு
சில பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் சூதக வலி, வயிற்று வலி, ஓழுங்கற்ற இரத்தப் போக்கு போன்றவற்றால் பெரிதும் அவதியுறுவார்கள். இவர்கள் ஆடு தீண்டாப் பாளை இலைகளை கஷாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட பாதிப்புகளிலிருந்து எளிதில் விடுபடலாம்.
மேலும் ஆடுதீண்டாப் பாளை விதைகளை எடுத்து அரைத்து வெந்நீரில் கலந்து கர்ப்பிணிப் பெண்களுக்குக் கொடுத்தால் பிரசவ நேரத்தில் உண்டாகும் வேதனை குறையும்.
இத்தகைய மருத்துவக் குணம் கொண்ட ஆடுதீண்டாப் பாளையை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.

No comments:

Post a Comment

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...