16 December, 2011

நன்றிகள் பலமுறை சொல்லி - 3ம் பாகம்......................தொடர்கின்றது.

எதிர்பாரா விதமாகவும் தொடராகவும் அமைந்து விட்ட என் தொழில் சார்ந்த ஐரோப்பிய நாட்டு பயணங்களால் தடையாகி போன என் தொடர் நிமித்தம் மன்னிப்பு கேட்டவனாக  இதனை தொடர்கின்றேன்.....
1986-ம் ஆண்டு ஆங்கில தினசரியில் வந்த அந்த விளம்பரம் :  "கால் நடை மருந்துகள் விற்பனை செய்யும் அனுபவமுள்ள ஒரு கால் நடை மருத்துவர் மஸ்கட்டிலுள்ள ஒரு நிறுவனத்திற்கு தேவை" - படித்தததும் நான் தேட ஆரம்பித்ததது வீட்டிலுள்ள உலக வரைப்பட புத்தகத்தைதான்....! 'மஸ்கட்' என்பதை ஒரு இனிப்பாக மட்டுமே சாப்பிட்டு அனுபவப்பட்ட நான் இந்த பெயரில் ஒரு ஊர் இருப்பதையே அப்போதுதான் அறிய ஆரம்பித்தேன். விண்ணப்பித்தேன்.  அகில இந்தியாவிலிருந்தும் ஒரேயொரு நபரையே தேர்வு செய்வதாக அறியப்பட்ட நிலையில்
5 மாதங்கள் உருண்டோடியதில் விண்ணப்பித்ததே மறந்து போயிருந்த ஒரு நாளில், பம்பாயிற்கு நேர்முகத் தேர்வுக்கு வரச் சொல்லிய கடிதம் ஆச்சரியமாக வந்தது. ரயிலில் பம்பாய் போய் நேர்முகத் தேர்வுக்கு போய் அமர்ந்த போதுதான் தெரிய வந்தது...அகில இந்தியாவிலிருந்தும் மொத்தம் 1400 மருத்துவர்கள் விண்ணப்பித்திருந்ததில், 300 பேர் அழைக்கப்பட்டிருந்ததில் நானும் ஒருவன் என்பது....! இந்த ஒரே காரணத்திற்காகவே எனக்கு அந்த வேலை கிடைக்காதென்றே ஒரு முடிவு தெரிந்த ஒரு முடிவுக்கு வந்தவனாக நடுக்கமும் பதட்டமும் முற்றிலும் இல்லாதவனாக அறைக்குள் நுழைந்தேன். வழக்கமான கேள்விகளெல்லாம் முடிந்து சம்பிரதாயமான கை குலுக்கள் முடிந்து தேர்வு முடியும் நேரம் நான் அங்கிருந்த 5 நபர்களிடம் ஒரு 2 நிமிடம் எனக்காக ஒதுக்க முடியுமா எனக் கேட்டேன். காரணம்... வளைகுடா நாடுகளில் வெறும் ஒட்டகம் மட்டுமே இருப்பதாக எண்ணியிருந்த எனக்கு அங்கு ஒரு விற்பனைக்காக கால்நடை மருத்துவரை தேர்வு செய்ய ஒரு நிறுவனம் இந்தியா வந்திருந்தது (1986ம் ஆண்டு காலக் கட்டத்தில்) மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. என் கேள்விகளை ஆரம்பித்தேன்...ஒட்டகம் தவிர என்னென்ன கால்நடைகள், அவைகளின் நோய்கள், மருத்துவ வசதிகள், வாய்ப்புகள், மருத்துவர்கள், மருந்து விற்பனை செய்யும் நிறுவனங்கள்...என என் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொன்ன நபர்களிடம் விடை பெற்று, ரயிலேறி சென்னை வந்து இறங்கினேன். ஒரு பதட்டமுமில்லாதவனாக 'சும்மா' பம்பாய் போய் வந்த அனுபவமாகவே எடுத்துக் கொண்ட எனக்கு ஒரு 10 நாட்கள் கழிந்து  நான் அந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டதாக தந்தி வந்த போது என்னால் நம்பவே முடியவில்லை..எல்லா ஏற்பாடுகளும் முடிந்து நான் Air India மூலம் மஸ்கட் விமான நிலையத்தில் கால் பதித்த அந்த தினம் 1987 மார்ச் 8ம் நாள். உலகப் புகழ் பெற்ற நிறுவனங்களான Pfizer, Cooper, Beecham, Hoechst, Intervet, Rhone Meriux, SKF தயாரிப்புகளை ஒமான் நாட்டின் கால்நடை (பசு, கோழி, ஆடு, ஒட்டகம்) பண்ணைகளில் விற்பனை செய்யும் பணி. புதிய சூழ்நிலைகள் ஒவ்வொரு நாளும் புதிய அனுபவங்களை கற்றுத் தந்தது மட்டுமல்லாமல், மேற்படி நிறுவனங்கள் விற்பனை பயிற்சிகளுக்காக அழைத்ததால் என்னை France, Cyprus, Germany, UK என பயணிக்க வைத்தது. என் குடும்பமும் என்னை வந்தடைய, மஸ்கட்டில் என் வாழ்க்கை ஒரு சீரான, தொடராக 4 ஆண்டுகளை பின் தள்ளி 1991ம் ஆண்டினுள் அடியெடுத்த வைத்த ஒரு நா ளில், நான் என் நிறுவன மேலாலரிடன் எனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தேன்........................

தொடரும்.....      இதற்கு முந்தைய பகுதியை படிக்க...

3 comments:

  1. முக்கியமான இடத்தில் தொடரும் போட்டுட்டீங்க...! (ஆனா தொடர்னா அப்படித்தானே இருக்கனும்..!)

    ReplyDelete
  2. நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

    என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...

    ReplyDelete
  3. சார் J P சார் எங்களோட மானசீக குரு . சார் அப்புடியே மார்க்கெட்டிங் துறையில் எங்களுக்கான வேலை வாய்ப்பை பத்தி ஒரு பதிவை எழுதுங்களேன் .

    ReplyDelete

தமிழ்- மூன்று சுழி, இரண்டு சுழி!

 மூனுசுழி “ண” , ரெண்டுசுழி “ன” என்ன வித்தியாசம்? - நா.முத்துநிலவன் இலக்கணக் கட்டுரை கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம...